coconut tree (தென்னை மரம் )
தென்னை மரம்
அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர், நமது வழிபாடுகளிலும், அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய்.
* இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள், கட்டிகள் வராது. மேலும் மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.
* தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கு ஆகியவை குணமாகும்.
*தேங்காய் பாலை குடித்தால் நட்டுவாக்களி கடித்த விஷம் இறங்கி விடும். வயிற்றில் அல்லது வாயி புண் இருந்தால் தேங்காய் பாலில் தேன் கலந்து குடிக்க ஓரிரு நாளில் குணம் ஆகும்.
* தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு. வந்தால் தொண்டைப்புண் குணமாகும். தேங்காய் பால்விட்டு சீரகத்தை அரைத்து பாதிப்பு உள்ள இடத்தில் பூசி வர வெயில் காலத்தில் ஏற்படும் கட்டி, கொப்புளங்கள் வேர்க்கூறு போன்றவை குணமாகும்.
*தென்னம் வேரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கு கட்டுப்படும்.
* புளிக்காத தென்னங்கள்ளை கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அழகான குழந்தைகள் பிறக்கும்.
No comments:
Post a Comment