கண் பார்வை தெளிவு பெற...
*வைட்டமின் 'ஏ' அதிகமுள்ள முருங்கைக் கீரை, கேரட், முளை கட்டிய
பயறு வகைகள். கரிசலாங்கண்ணி கீரை. பொள்ளாங்கண்ணி கீரை.
கொத்துமல்லிக் கீரை இவற்றை உணமில் அதிக அளவு சேர்த்து வர
வேண்டும். சிரசாசனம், பிராணாயாமம் போன்ற பயிற்சி கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்ணொளியை புதுப்பிக்கிறது.
கொத்துமல்லிக் கீரையை பச்சையாக மென்று தின்று வர கண்பார்வை கூடும். கொத்துமல்லிக் கீரையை நன்கு மைய அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் காலை, மாலை ஒன்பது நாள்கள் பருகி வர மாலைக்கண் நோய் குணமாகும்.
அமுக்கராக்கிழங்கையும் அதிமதுரத்தையும் சம அளவு எடுத்து நன்கு உவர்த்தி இடித்து துணியில் சலித்து வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை தெய்விக்காய் சாற்றில் சேர்த்து குடித்து வர மூக்குக் கண்ணாடி போட வேண்டிய அவசியமே வராது.
பாதாம் பருப்பு 30 கிராம், சோம்பு 10 கிராம், பேரீச்சம்பழம் 50 கிராம். அத்திப்பழம் 20 கிராம் இவற்றை அரைத்துப் பாலில் கலந்து 40 நாள்கள் இரவில் சாப்பிட்டு வர கண் கோளாறுகள் அனைத்தும் விடுதவை பெற்று பார்வை சக்தி பெருகும்.

No comments:
Post a Comment