முருங்கைக் கீரை ( spinach benefits in tamil )
முருங்கைக் கீரை
கசப்புத் தன்மை உடைய இந்த கீரை மிகவும் சத்தான ஆகாரம் ஆகும். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி புரதம், இரும்புச் சத்து உள்ளது. *முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை
மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை,
கால், அசதி நீங்கும்.
* முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.
* முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். * முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். முருங்கைக்காய் கோழையகற்றிக் காமம்
பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து தும்மல்
உண்டாக்கும். பட்டை கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப்
போக்கும். வியர்வையைப் பெருக்கும்.
* முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி. பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்சசி நீங்கும்.
* முருங்கைப் பூவை சமஅளவு துவரம் பருப்பு சேர்த்த சமைத்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய்க்கசப்பு மாறும்.
No comments:
Post a Comment