let-s-find-out-what-are-the-benefits-of-sirukurinjan சிறு குறிஞ்சான் மூலிகையின் பயன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 2 September 2021

let-s-find-out-what-are-the-benefits-of-sirukurinjan சிறு குறிஞ்சான் மூலிகையின் பயன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம் !!

Sirukurinjan

சிறு குறிஞ்சான் மூலிகையின் பயன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம் !!

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகள் மற்றும் மரங்களில் கொடிபோல படரும். இது கசப்புச் சுவை உடையது. இதன் இலை சிறிதாகவும், முனை கூர்மையாக மிளகாய் போன்று காணப்படும். 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உணவாக கருதப்படுவது குறிஞ்சாக்கீரை. சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறிஞ்சாக்கீரை சிறந்த  மருந்தாகும்.
 
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் எடை குறைய குறிஞ்சாக்கீரை உதவுகிறது.
 
குறிஞ்சாக்கீரை சளியினை போக்கும் தன்மை உடையது .வயிற்று வலியினை போக்கிறது. குளுமைப்படுத்தும் திறன் கொண்டது.
 
குறிஞ்சாக்கீரை சிறுநீர் போக்கினை தூண்டும் தன்மை மிகுந்தது. நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்க உதவிகிறது. உடல் சூடு தணிய செய்யும்.
 
எல்லா விதமான விஷகடிக்கும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
 
கடுமையான ஜூரம் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் ஜூரம் குறையும்.
 
குறிஞ்சாக் கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
 
உடலில் உண்டாகும் தடிப்புகள், சொறி, படை இவைகளுக்கு இதன் இலையை அரைத்த ு பூசி வர அவை மறைந்துவிடும்.

No comments:

Post a Comment