*எருக்கு*
எருக்கு இரண்டு வகைப்படும். அதில் வெள்ளை மலர்களைக் கொண்ட வெள்ளை எருக்கே மருத்துவக் குணம் கொண்டது. இது விஷத்தன்மை கொண்டது.
* பாம்பு கடித்தவர்க்கு புன்னைக்காயளவு எருக்கு இலையை அரைத்து உடனே கொடுக்கலாம். தேள் கடிக்குச் சுண்டைக் காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.
* இதன் நல்ல முற்றிய இலையுடன், மூன்று துளி துளசிச்சாறு,
10 துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
*நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்குவின் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக் கப்பட்ட குதிகாலை 5 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் குதிங்கால் வாதம் குணமாகும்.

No comments:
Post a Comment