மலட்டுத் தன்மையை விரட்டும் 'மர வைத்தியம்'!
‘ஆலங்குச்சியால பல் விளக்கினா.. பல்லுக்கு பலம் கிடைக்கும்'னு சொல்லக் கேட்டிருப்பீங்க. மலட்டுத்தன்மையைப் போக்குற குணமும் அதுகிட்ட இருக்குதுங்கோ! ஆலமர இளம் இலை (தனிர்), விழுது, விதை, மொக்குனு இதுல ஏதாவது ஒண்ணை எடுத்து, மையா அரைச்சி, பால்ல கலந்து சர்க்கரை சேர்த்துக் குடிச்சுட்டு வந்தீங்களா... மலட்டுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா விலகும். ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இது பொருந்தும்.
"அரசனை நம்பி புருசனை கைவிட்டாளாம்'னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்களே. இதுக்கு பார்கிட்டயாவது பொழிப்புரை கேட்டுப் பாருங்க. தப்புத் தப்பாத்தான் சொல்லுவாங்க. இங்க ‘அரசன்’னு சொன்னது அரச மரத்தைத்தான். குழந்தை வேணுங்கிற பொண்ணுங்க, கோயிலைச் சுத்தி வாறப்பட அங்க இருக்குற அரச மரத்தையும் சுத்தி வருவாங்க அந்த மரத்திலிருந்து வெளியாகுற காத்து, அவங்களோட கருப்பை வியாதிகளைக் குணப்படுத்தி, தாயாகுற அந்தஸ்தை தரும்.
அரச மரத்தோட பழங்கள் நல்லா காயவச்சி, பவுடராக்கி கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தா..அது ஆணாயிருந்தாலும், பொண்ணாயிருந்தாலும் மலட்டுத்தன்மையைப் போய்லிம்இலத்தை இலை ஒரு கைப்பிடி, மிளகு 6 எண்ணிக்கை, பூண்டு 4 பல் எடுத்து மையா அரைச்சிக்கோங்க மாதவிடாய் வந்த முதல் நாளும், ரெண்டாவது நாளும் வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வர்றதன் மூலமா- குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பிருக்கு.
இன்னொரு வைத்தியமும் சொல்றேன். லேப்பிலையை 100 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சி, மாதவிடாய் வத்த நாள்ல இருந்து 6 நாளைக்கு வெறும் வயித்துல சாப்பிடணும். அதுக்கு அப்புறமா... அரசு, மா - இது ரெண்டு இலைகளையும் தலா 50 கிராம் எடுத்து அரைச்சி, வெறும் வயித்துல ஒன்பது நாளைக்குச் சாப்பிட்டு வந்தா. கர்ப்பப்பையில் இருக்குற அழுக்கு, புழு, பூச்சி எல்லாம் ஒழிஞ்சி போயிரும். 9க்கிரமா காப்பம் தரிக்கும்.
இந்த மருந்தை சாப்பிடுறப்ப. கொத்தமல்லி இவை, ராகி சாப்பிட்டு வந்தா. நல்லது. ராத்திரி சாப்பாட்டை கொறைச்சிக்கணும்கறதும் முக்கியம்!
No comments:
Post a Comment