Tumba leaf is the solution to most problems! (பெரும்பாடு பிரச்னைக்குத் தீர்வு காணும் தும்பை இலை!)
மாதவிடாய்க் கோளாறுகளுக்கு மருந்து சொன்னேன். இங்கே 'பெரும்பாடு'ங்கிற நோய்க்கு மருந்து சொல்றேன். அதாவது மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சோந்து வாறதை பெரும்பாடுன்னு சொல்வாங்க இந்த தோயால அவதிப்படுறவுக நான் சொல்ற வைத்தியத்தைக் கவனமா செய்யுங்கட கைமேல பலன் கிடைக்கும்.
வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பெரும்பாடு நோய் குணமாக...
நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வாற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா-பெரும்பாடு
ஒரு முழு வாழைப் பூவை எடுத்து இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில் வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.
கடுக்காய் பத்தி எல் லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 235 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு, ரெண்டா தட்டிப்போட்டு. 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். .அது 2.5 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நான் குடிங்க பெரும்பாடு பிரச்னை சரியாகும்.
அருகம்புல் 10 கிராம். மாதுளை இலை 10 கிராம் எடுத்து. 100 மில்லி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி. 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.
தும்பை இலை ஒரு புளியங் கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்னை சரியாயிரும்.
இலத்தை இலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணியில் போட்டு காய்ச்சி, 100 மில்லியாக்கி காலைல குடிக்கணும், இப்படி மூணு நாளைக்கு செஞ்சாலே பெரும்பாடு பிரசனை சரியாகும்.
நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்துபொடி பண்ணி வச்சிக்கிடனும் அதில கால் ஸ்பூஸ் எடுத்து, அரைடம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை20நாள்சாப்பிட்டாலேபெரும்பாடு சரியாகும்.

No comments:
Post a Comment